பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில், இடியுடன் கூடிய மிக கனமழை திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பெய்யும் என்றும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 44 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் – ரயில்வே அமைச்சகம்..!
தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மழை குறைந்தபட்சமாக 9 செ.மீ பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இன்று முதல் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சமாக கடலோர பகுதிகளில் 40 – 50 கி.மீ வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.