இந்தியாவில் பள்ளி மாணவர்களிடையே எவ்வித பாகுபாடு இருக்கக்கூடாது என சீருடை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள தனியார் பள்ளியில், இஸ்லாமிய மாணவரை நிற்க வைத்து சக மாணவர்கள் மூலம் கன்னத்தில் அறைய வைக்கும் ஆசிரியை திரிப்தா தியாகியின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த பதிவில் மாணவர்களிடம், “ஏன் மெதுவாக அடிக்கிறீர்கள்? வேகமாக அடியுங்கள்” என ஆசிரியை கூறியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பள்ளி போன்ற புனிதமான இடத்தில் பாகுபாடு எனும் நஞ்சை புகுத்தும் இந்த ஆசிரியை தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதனால் மாணவர் தாக்கப்படும் வீடியோவைப் பகிர வேண்டாம் எனவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சொந்த ஊர் செல்லும் பயணிகளே.., டிக்கெட் விலை பல மடங்கு உயர்வு.., வெளியான ஷாக் நியூஸ்!!!!