கேரளாவில் வரும் 29ஆம் தேதி ஓணம் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .இப்படி இருக்கையில் சொந்த ஊரில் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கேரள மக்கள் தங்களது ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால் வேலை நிமித்தம் காரணமாக கடைசி நேரத்தில் கேரளா செல்லும் பயணிகளுக்கு பேருந்து, ரயில் போன்றவற்றில் டிக்கெட் கிடைக்காததால் சென்னை விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக தற்போது சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.