நாடு முழுவதும் கடந்த 2004 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் இந்த கோரிக்கைக்கு தற்போது வரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. இப்படி இருக்கையில் ஹரியானா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நேற்று அம்மாநிலத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் ஒன்றாக ஹரியானா மாநிலத்தில் இனி எக்காரணத்தைக் கொண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
ஜி 20 மாநாடு எதிரொலி: விடுமுறை அறிவிப்பை வெளியிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!!