லக்னோவில் இருந்து கடந்த 17ஆம் தேதி சுற்றுலாவுக்காக தனியார் பெட்டியில் பயணிகள் பலரும் புறப்பட்டு இருந்தனர். இவர்கள் கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுலாத்தளங்களை பார்வையிட்ட பின், புனலூர் எக்ஸ்பிரஸ் மூலமாக இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை 03.47 மணிக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தனர். நாளை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலமாக செல்ல இருந்த தனியார் பெட்டி பிரித்தெடுக்கப்பட்டு, மதுரை யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த நிலையில் அதிகாலை 05.15 மணிக்கு தனியார் பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி உள்ளனர். அப்போது தீ பற்றி பயணிகள் விபத்துக்குள்ளானார்கள். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும், பலரும் படுகாயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
இஸ்லாமிய பள்ளி மாணவரை அறைய சொன்ன ஆசிரியை., வெளியான பகீர் தகவல்!!!