நாடு முழுவதும் முதியவர்கள், பெண்கள் என பெரும்பாலானோர் வசதியான பயணத்திற்கு ரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதற்கேற்றாற்போல் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வரும் ரயில்வே நிர்வாகம், சில பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகையும் வழங்குகிறது. அந்த வகையில் மனவளர்ச்சி குன்றியவர்கள், பார்வையற்ற, காது கேளாத போன்ற பாதிப்புகளை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பொது வகுப்பு, ஸ்லீப்பர் கோச் மற்றும் 3வது ஏசி ஆகிய பெட்டிகளில் 25 முதல் 75 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் இந்த சலுகை மேற்குறிப்பிட்ட பயணிகள் உடன் செல்லும் ஒருவருக்கும் பொருந்தும். அதேபோல் புற்றுநோய், இரத்த சோகை, காசநோய், தலசீமியா, எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிறப்பு சலுகை உண்டு.
மதுரையில் ரயில் தீ விபத்து: இதுவரை 9 பேர் உயிரிழப்பு., தெற்கு ரயில்வே நிவாரண நிதி அறிவிப்பு!!!