தற்போதைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். சொல்லப்போனால் போதையில் தாம் என்ன செய்கிறோம் என்ற அளவுக்கு தெரியாமல் குடித்துவிட்டு தவறான காரியங்களில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் சென்னை மண்ணூர்பேட்டை அருகில் போதையில் ஒரு இளைஞரை வெட்டிக் கொன்ற சம்பவம் அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது. அதாவது மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் பாலா(எ)பாலாஜி பிரியாணி வாங்க சென்றுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த சமயத்தில் நெப்போலியன், சங்கர் பாய், மண்டை மகேஷ் ஆகிய மூவரும் குடிபோதையில் பாலாஜி வாகனத்தை இடித்துள்ளனர். அப்போது அந்த மூவருக்கும் பாலாஜிக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கொஞ்ச நேரத்தில் வாய்ச்சண்டை கைகலப்பாக மாற அந்த மூன்று பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாவை தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்றனர். இந்த சம்பவத்தால் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த மூவரும் ஏற்கனவே போலீஸ் தேடும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களே குளுகுளு நியூஸ்.., நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., ஜாலியோ ஜிம்கானா தான்!!