கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கும் சில இடங்களில் மிதமான முதல் கன மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் இந்த 11 மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் குறிப்பிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் நாளை சேலம், திருப்பத்தூர், நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செல்ஃபி மோகத்தால் 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடும் இளைஞர்.., கொல்லி மலையில் பரபரப்பு!!