இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் மற்றும் பும்ரா ஆகிய வீரர்கள் முழு உடற் தகுதி பெற்று இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இருப்பினும், கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இவர்களின் பார்ம் என்பது ஆசிய கோப்பையை பொறுத்தே தெரியவரும். இதனால், இந்திய அணியில் 4 வது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவார் என்ற கேள்வி இன்னும் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இதற்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி, “நம்பர் 4 என்பது ஒரு எண் மட்டுமே, யார் வேண்டுமானாலும் இந்த இடத்திற்கு பொருத்தலாம் தேவைப்பட்டால் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகிய மூவரும் 4வது இடத்தில் பேட் செய்யலாம்” என கங்குலி தெரிவித்துள்ளார்.