கோவிட் -19 நோயறிதலுக்கான பூல்(pool) பரிசோதனைக்கு 2-5 சதவீதம் நேர்மறை விகிதம் உள்ள மாநிலங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்..தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புது பரிசோதனை முறையை பரிந்துரைத்து உள்ளது தமிழக அரசு.
POOL டெஸ்ட் என்றால் என்ன ??
பூல் சோதனை என்பது ஐந்து நபர்களின் மாதிரிகளை ஒன்று (பூல்) என சோதிக்கும் ஒரு முறையாகும். பூல் சோதனை செய்தால் அது நெகடிவ் ஆக இருந்தால் , குளத்தில் உள்ள அனைத்து மாதிரிகள் நெகடிவ் ஆகா கருதப்படுகின்றன.குறைந்த அளவு வைரஸ் சுமை கொண்ட நேர்மறை மாதிரிகள் காணாமல் போவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதால், இப்போது ஒரு பூலின் அதிக எண்ணிக்கை ஐந்தாக உள்ளது என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ,நேற்று ஒரே நாளில் 4965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேலை இல்லையா? – தமிழக அரசு 1 இலட்சம் கடன்..!!
சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் வழக்கமான சோதனை முடுக்கிவ்டப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய முறையில் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் (Pooled Test) முறையில் குழு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.