தமிழகத்தில் ஊரக மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் வேலையற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் கடனை அரசு வழங்குகிறது
.
ஆஜீவிகா திட்டம்:
கிராமப்புற ஏழைகளுக்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டு 2011ஆம் ஆண்டில் ஆஜீவிகா என்ற கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம் மத்திய ஊரக வளர்ச்சிக்கான அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் இதர மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் தங்களது வேலைகளை இழந்து வீட்டிற்குத் திரும்பியுள்ள தொழிலாளர்கள் சொந்தமாக வர்த்தகம் செய்வதற்காக ரூ.1 லட்சம் கடன் பெற இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
சுய உதவிக் குழுக்கள்:
இத்திட்டத்துக்கான நிதியுதவியில் உலக வங்கியும் பங்களித்து வருகிறது. சுயமாகவே தங்களை நிர்வகித்துக் கொள்ளும் சுய உதவிக் குழுக்களின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இந்த வசதியை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 1இல் பக்ரீத் பண்டிகை – தலைமை ஹாஜி அறிவிப்பு..!!
விண்ணப்பிக்க வயது வரம்பு ஆண்களுக்கு 18 முதல் 35 வயது வரையும், பெண்களுக்கு 18 முதல் 40 வயது வரை ஆகும்