சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது முத்துவும் மீனாவும் பாட்டியை பார்ப்பதற்காக கிராமத்திற்கு சென்றுகொண்டுள்ளனர். வழியில் ரோகிணியின் அம்மாவும் மகனும் பஸ்ஸில் ஏற மீனாவிற்கு பழக்கமாகின்றனர். ரோகினி பற்றிய உண்மைகள் அனைத்தையும் அவரது அம்மா சொல்ல ஆரம்பிக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் முத்துவுக்கும், மீனாவிற்கும் ரோகினியை பற்றி தான் சொல்கிறார்கள் என்ற உண்மை தெரியாது. இது ஒரு புறம் இருக்க விஜயா ரோகினியை நம்பி 5 லட்சம் வரை பணத்தை கொடுத்து விட்டார். ரோகினி திட்டம் போட்டு ஏமாற்ற ஆரம்பிக்க மனோஜ் வழக்கம் போல நம்பி விட்டார்.
எங்க வர்ற.., போ போ.., முதலிடம் எனக்கு தான்.., கெத்து காட்டும் பாக்கியலட்சுமி சீரியல்!!!
இப்படி இருக்க இப்பொழுது ரோகினி பற்றிய உண்மை தெரிய வர கொஞ்சம் வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் திருமணம் நெருங்கும் தருணத்தில் எப்படியும் ரோகினியின் அம்மா அங்கு வந்து தானே ஆக வேண்டும். அப்படி இருக்க மீனா அவரை அடையாளம் கண்டு அனைத்து விஷயத்தையும் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் ரோகினியின் உண்மை முகம் வெட்டவெளிச்சத்திற்கு வரவும் வாய்ப்புகள் உள்ளது.