தென் இந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியான சமந்தா, நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு மளமளவென பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். குறிப்பாக, பெண் கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யசோதா, சாகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார் சமந்தா.
ஆனால், இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவுகளைப் பெறத் தவறியது. இதில் குறிப்பாக, சாகுந்தலம் திரைப்படம் முதலுக்கே மோசம் விளைவிக்கும் அளவுக்கு படு தோல்வியை சந்தித்தது. இப்போது, சமந்தாவுக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘குஷி’ திரைப்படம் தான். இந்த படம் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயை தொடர்ந்து ரஜினியை மிரட்ட வரும் அர்ஜுன்….,இந்த காம்போ ஹிட் கொடுக்குமா?…,
இதற்கிடையில், நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகி படு தோல்வி அடைந்த ‘சாகுந்தலம்’ திரைப்படம் சிறந்த இந்திய சினிமாவுக்கான 4 விருதுகளை அள்ளி இருக்கிறது. அதாவது, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘சாகுந்தலம்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படம், சிறந்த பேண்டஸி படம், சிறந்த இந்தியன் படம், சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் விருதுகளை வங்கிக் குவித்திருக்கிறது. இந்த விருதுகள் தான் ‘சாகுந்தலம்’ படக்குழுவினருக்கு கிடைத்த ஒரே ஆறுதலாக அமைந்திருக்கிறது.