இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. பண்டைய தமிழகத்தில் காணப்பட்ட குத்துசண்டை போட்டி மற்றும் அதனை சார்ந்த அரசியல் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளைப் பெற்றது.
இந்த படத்தில் மாரியம்மா என்ற கிராமத்து கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். அந்த வகையில், ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு துஷாரா விஜயனின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த சூழலில் படத்திற்கு அவசியம் ஏற்பட்டால் கவர்ச்சியான கதாப்பாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருப்பதாக கிராமத்து கிளி நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.
‘அதிகமா அடி வாங்குனது நான் தான்….கப்பு எனக்கு தான்’….,4 விருதுகளை அள்ளிய ‘சாகுந்தலம்’…,
அதாவது, ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மாரியம்மா கதாப்பாத்திரம் எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த படத்தின் 2 ஆம் பாகம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும். அந்த அழைப்பிற்காக தான் காத்திருக்கிறேன். கதை மற்றும் கதாப்பாத்திரம் எனக்கு ஏற்றபடி இருந்தால் கவர்ச்சியாக நடிக்கவும் நான் தயார்’ என்று கூறியுள்ளார் நடிகை துஷாரா விஜயன்.