தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது இவர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். இருந்தாலும் எதிர்த்து வந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது தனது கணவர், குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தான் அவர்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்கள். ஒரு குழந்தையின் பெயர் ‘உயிர் ருத்ரோநீல் என் சிவன்’ என்றும் மற்றொரு குழந்தையின் பெயர் ‘உலக் தெய்விக் என் சிவன்’ என்றும் பெயர் சூட்டப்பட்ட உள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் கட்?? வெளியான ஷாக் தகவல்!!
அதுமட்டுமின்றி விக்கி தொடர்ந்து தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதை பழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தனது மனைவி நயன்தாரா மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.