ஒற்றுமையாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஜனார்த்தனன் நினைத்தது போலவே அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டுவிட்டது. இதனால் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து சென்ற நிலையில் கதிர் மற்றும் மூர்த்தி இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் முல்லையின் அம்மா தனத்திடம் ஒரே வீட்டுக்குள்ளே 2 கர்ப்பிணிகள் இருக்க கூடாது. எனக்கு என் பிள்ளை நல்லபடியா குழந்தை பெற்று கொள்ளணும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் நீ இங்க இருந்தா என் பிள்ளைக்கு ஏதாச்சு ஆகிவிடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. மேலும் நீ உன் அம்மா வீட்டுக்கு போயிடு என கோபமாக சொல்லிவிடுகிறார். இதை கேட்ட தனம் வாசலிலேயே மனவருத்தத்துடன் அமர்ந்திருக்கிறார். தூங்குற நேரம் வந்தும் ஏன் இந்கு அமர்ந்துருக்கீங்கள், உள்ளே வந்து தூங்குங்க அக்கா என முல்லை கூப்பிட அதற்கு இல்லை நீங்க போய் தூங்குங்க என சொல்லிவிடுகிறார். இதை கேட்டு கதிர், முல்லை இருவருக்கும் சந்தேகம் வருகிறது.
விக்கி-நயன் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?? அவர்களே வெளியிட்ட புகைப்படம்!!
இதன் பிறகு முல்லையின் அம்மா சொன்னதை மூர்த்தியிடம் சொல்லி நாம எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவோம் மாமா என சொல்லி தனம் அழுகிறார். அதற்கு அவர் நாளை காலையில் கிளம்பிவிடுவோம் என சொல்கிறார். இதன் பிறகு காலையில் ரூமைவிட்டு வெளியே வந்த முல்லையிடம் நான் இந்த பிரசவத்திற்கு என் அம்மா வீட்டுக்கு கிளம்புகிறேன் என சொல்ல, அதை கேட்ட கதிர் முல்லை ஷாக் அடைகின்றனர். மேலும் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என கேட்டு மாறி மாறி கேள்வி கேட்டு வருவது போன்ற காட்சிகளுடன் இன்றைய எபிசோட் அமைந்திருந்தது.