வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் கலக்கிய நடிகை பூமிகா சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை பூமிகா
தமிழ் சினிமா வெள்ளித்திரையில் நடிகையாக கலக்கி வந்தவர் தான் பூமிகா. இவர் விஜய்யுடன் பத்ரி, குஷி போன்ற படத்தில் ஜோடி போட்டு நடித்தார். பின் சினிமாவில் கொஞ்ச நாள் தலை காட்டாமல் இருந்த பூமிகா இப்போது மீண்டும் சினிமா பக்கம் எட்டிப் பார்த்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கூறியதாவது முன்பு இருந்ததை விட இப்போது காலம் எவ்வளவோ மாற்றம் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. முன்பு நடத்தியதை போலவே இப்போதும் பெண்களை நடத்துகின்றனர்.
ஆனால் நெட்ஃபிக்ஸ், அமேசான் வெப் தொடர்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். இதே போன்று சினிமாவிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நடிகை பூமிகா ஆதங்கத்துடன் பேட்டியளித்துள்ளார்.