தமிழகத்தில் அனைவருக்கும் சம உரிமை என்பது போல் திருநங்கைகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அரசு துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் திருநங்கைகளின் மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய உரையாற்றியுள்ளார். அதன்படி “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் திருநங்கை என அந்தஸ்து கொடுத்ததோடு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நல வாரியத்தையும் அமைத்தார். இதன்மூலம் மாதாந்திர ஊக்கத்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விஜய் டிவி நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.., பார்ட்டி, போட்டோஷூட் செய்து கொண்டாடிய ஆச்சரிய நிகழ்வு!!
இதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் சாதித்து வரும் திருநங்கைகளின் விளையாட்டு திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழகத்தில் புதிய திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.