நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏகே 62:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். அவரின் ஏகே 62 படத்திற்காக ஒட்டுமொத்த திரையுலகமே காத்துக்கொண்டிருக்கிறது. படத்தை குறித்து எந்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் தந்தை இறந்த துயர செய்தி ரசிகர்களின் மனதை புரட்டி போட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அவரின் பிறப்புக்கு பிரபலங்கள் அனைவரும் இரங்கலை தெரிவித்தனர். இந்த நிலையில் ஏகே 62 படத்தை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் ஏகே 62 படத்திற்கு பிறகு பைக் டூர் செல்ல திட்டம் தீட்டி வைத்திருந்தார். ஆனால் தற்போது அப்பாவின் இறப்பு தாங்கமுடியதால் பைக் டூரை கேன்சல் செய்துள்ளார்.
இதனால் மகிழ் திருமேனியிடம் பொறுமையாக கதையை ரெடி செய்யுங்கள் என்று அஜித் கூறியுள்ளாராம். எனவே அடுத்த மாதத்தில் அப்டேட் வெளியிடுவதாக லைக்கா நிறுவனம் கூறிய நிலையில், அப்டேட் வெளியாவதற்கு வாய்ப்பே இல்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் மே மாதத்தில் தொடங்குவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.