நடிகர் அஜித் குமார் தந்தை உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார்:
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடித்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது ரசிகர்கள் அனைவரும் ஏகே 62 படத்தின் அப்டேட்-காக காத்திருக்கும் நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, நடிகர் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் (வயது 84) அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய அப்பாவின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம்.
“ஒன்றாக கனவு காண்பதில் இருந்து கனவை வாழ்வது வரை” சகோதரர் மீது பாசத்தை பொழிந்த ஹர்திக் பாண்டியா!!
அதுமட்டுமின்றி குடும்பத்தினருடன் இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் தந்தை உடல் சென்னையில் உள்ள சென்னை பெசன்ட் நகரில் தகனம் செய்யப்பட்டது.