ஒரே நாளில், கால்பந்து நட்சத்திர வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி வெவ்வேறு சாதனைகளை படைத்து அசத்தி உள்ளனர்.
கால்பந்து:
பிரபலமான கால்பந்து கிளப்புகளுக்கு இடையே விறுவிறுப்பாக UEFA யூரோ சாம்பியன்ஸ் லீக், பிரெண்ட்லிஸ் உள்ளிட்ட பல லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று கால்பந்தின் இரு நட்சத்திர வீரர்களான ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி லிச்சென்ஸ்டைன் அணியை எதிர்த்தும், மெஸ்ஸியின் அர்ஜென்டினா பனாமா அணியை எதிர்த்தும் மோதின.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த இரு வெவ்வேறு போட்டிகளில், போர்ச்சுகல் அணி 4-0, அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. இதில், போர்ச்சுகல் சார்பாக ரொனால்டோ இரு கோல்களும், அர்ஜென்டினா சார்பாக மெஸ்ஸி ஒரு கோலும் அடித்து அசத்தினார். இந்த போட்டிகளின் மூலம், ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவரும் வெவ்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
மறைந்த அஜித்தின் தந்தை உடல் தகனம் .., சோகத்தில் குடும்பம்!!
அதாவது, இந்த போட்டியில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தன் மூலம், தனது 800 வது கோலை அடித்து வரலாறு படைத்துள்ளார். இவரை தொடர்ந்து, ரொனால்டோ தனது சர்வதேச 197 வது போட்டியில் களமிறங்கி, முன்னாள் ஜாம்பவான்களான பேடர் அல்-முதாவாவை (196 போட்டிகளில்) பின்னுக்குத் தள்ளி உள்ளார். இந்த பட்டியலில், மலேசிய ஐகான் சோ சின் ஆன் (195), எகிப்திய அகமது ஹசன் (184), ஓமன் ஜாம்பவான் அகமது முபாரக் (183) அடுத்ததடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.