“ஒன்றாக கனவு காண்பதில் இருந்து கனவை வாழ்வது வரை” சகோதரர் மீது பாசத்தை பொழிந்த ஹர்திக் பாண்டியா!!

0
"ஒன்றாக கனவு காண்பதில் இருந்து கனவை வாழ்வது வரை" சகோதரர் மீது பாசத்தை பொழிந்த ஹர்திக் பாண்டியா!!

இந்திய அணியின் வருங்கால கேப்டனாக திகழும் ஹர்திக் பாண்டியா தனது, சகோதரனான க்ருணால் பாண்டியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா:

இந்திய அணியின் வருங்கால கேப்டனான ஹர்திக் பாண்டியா திகழ்வார் என பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இவர், தற்போது இந்திய அணியின் டி20 போட்டிகளின் கேப்டனாகவும், ஒருநாள் தொடர்களில் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிந்த நிலையில், இவர் தற்போது ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்த உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தனது உடன் பிறப்பான க்ருணால் பாண்டியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட பதிவில், இவர்கள் இருவரும் நடனமாடிய போட்டோ முதல், சிறுவயதில் அப்பாவுடன் மற்றும் அம்மாவுடன் எடுத்து கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ளார்.

சூர்யகுமார், சஞ்சு சாம்சன் இருவரும் உலக கோப்பைக்கான அணியில் வாய்ப்பா?? ராகுல் டிராவிட் போட்ட திட்டம்!!

இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, ஹர்திக் பாண்டியா, ஒன்றாக கனவு காண்வது முதல், அந்த கனவை ஒன்றாக வாழ்வது வரை உள்ள இந்த பயணத்தில் எனக்குப் பக்கத்தில் வேறு யாரும் இருந்தது இல்லை என குறிப்பிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, என்னுடைய மகனுக்கு நீங்கள் சிறந்தவராக இருந்ததைப் போலவே, உங்கள் மகனுக்கும் சிறந்த HP அப்பாவாக இருக்க முயற்சிப்பேன் என்று பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பே என பதிவிடுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here