நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து பாலிவுட் விமர்சகர் உமர் சந்துரு ட்வீட் செய்தது தளபதி ரசிகர்களின் மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஐகானிக் ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்பொழுது படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திடீரென நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஷூட்டிங் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் Be Safe Nanba என்று ட்வீட் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் பாலிவுட் விமர்சகர் உமர் சந்துரு விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து ட்வீட் செய்தது தளபதி ரசிகர்களின் மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது. அதாவது கடந்த சில காலமாக விஜய்க்கும் சங்கீதாவுக்கும் சண்டை விவாகரத்து செய்ய போகிறார்கள் என்று தகவல்கள் பரவின. ஆனால் அது பொய்யான தகவல் என்று நாளைடைவில் தெரிய வந்தது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் UPI சேவை.., கூடிய விரைவில் அறிமுகம்.., வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!
தற்போது விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் கடந்த 19ஆம் தேதி கடுமையாக சண்டை போட்டுக் கொண்டதாகவும், சண்டை முத்தி போன நிலையில் சங்கீதா தனது கணவர் விஜய்யை இறுதியாக எச்சரித்ததாகவும் உமர் சந்துரு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த தளபதி ரசிகர்கள் கோபத்தில் இருந்து வருகின்றனர்.