தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக, ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.5 வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ரேஷன் ஊழியர்கள்
தமிழகத்தின் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடையில் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பொது மக்களுக்கு சரியான முறையில், மலிவு விலையில் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் ரேஷன் ஊழியர்களுக்கு அவ்வப்போது தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்போது பொங்கல் பண்டிகையின் போது நேரம் பார்க்காமல் உழைத்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவு துறை ஆலோசனை நடத்தி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதாவது ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு கார்டு ஒன்றுக்கு ரூ.5 வழங்க தமிழக கூட்டுறவுத் துறை முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் உடனடியாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.