தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விரைவில் UPI சேவை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுறவு வங்கி
டிஜிட்டல் மயமாகி வரும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப பண பரிவர்த்தனைகளும் நாளுக்கு நாள் மாறி வருகிறது. இத்தனை நாள் பணத்திற்காக ATM க்கு சென்ற மக்கள் இப்போது UPI செயலி மூலம் பேமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் GPay, Phonepe, Paytm என பல்வேறு UPI செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்போது இந்த UPI சேவையை தமிழக கூட்டுறவு வங்கிகளில் விரைவில் கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, அதன் 54 கிளைகள் மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு, அதன் 922 கிளைகள் அனைத்திலும் IMPS என்ற பண பரிவர்த்தனை செயலி கொண்டு வரப்பட்டது.
வளைந்து நெளிந்து இப்படி சிக்குன்னு ஜொலிக்கிறீங்களே சம்மு.., வசியம் வைத்தார் போல சுற்றும் இளசுகள்!!
இதை தொடர்ந்து இப்போது UPI சேவையும் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் GPay, Phonepe, Paytm போன்ற செயலிகள் மூலம் ஈசியாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இத்திட்டம் மட்டும் கொண்டு வரப்பட்டால் மக்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.