பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது பாக்கியா தனியாக குடும்பத்தை காப்பாற்ற போராடி வருகிறார். கேன்டீன் கான்ட்ராக்ட் எடுத்து இப்பொழுது கோபி மற்றும் ராதிகா முகத்தில் கரியை பூசி விட்டார். அதுமட்டுமில்லாமல், பாக்கியாவின் சின்ன சின்ன வளர்ச்சியை பார்த்து கோபியால் ஜீரணிக்க முடியவும் இல்லை. இந்நிலையில் இந்த சீரியலில் புதிய என்ட்ரியாக பிரபல நடிகர் ரஞ்சித் இணைந்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி இருக்க கதை எந்த பக்கம் நகர போகிறது என்பதே குழப்பமாக உள்ளது. ஒருவேளை ரஞ்சித் பாக்கியாவிற்கு ஜோடியாக இருப்பாரோ என்ற சந்தேகமும் உள்ளது. அதற்கும் மேல் இப்பொழுது கோபி சீரியலில் இருந்து கொஞ்சம் கேப் கிடைத்துள்ளதாக வீடியோவை வெளியிட்டுள்ளார். ரஞ்சித் புதிதாக களமிறங்கியுள்ளதால் அவருடைய காட்சிகள் தான் இப்பொழுது எடுக்கப்பட்டு வருகிறதாம்.
இந்த பிரபல தொடரில் இனி இவங்க கிடையவே கிடையாது.., சீரியல்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!
மேலும் வீடியோவில் ஹீரோ ரஞ்சித் என்று கோபி குறிப்பிட்டு சொல்லியுள்ளார். அப்படி என்றால் கண்டிப்பாக ரஞ்சித் பாக்யாவுக்கு ஜோடியாக தான் இருக்க வேண்டும். அநியாயமா கோபி உண்மையை உளறிட்டாரே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram