தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனக்கென ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் வித்யா no 1 சீரியல் ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் டெலிகாஸ்டாகி வருகிறது. இதில் ஹீரோயினாக இருக்கும் வித்யா படிக்காதவள் என்பதால் அவரது மாமியார் வேதவல்லி அவரை வெறுக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் இவர் தன்னுடைய திறமையால் பல சவாலான சூழ்நிலைகளை சமாளித்து அந்த வீட்டின் சிறந்த மருமகள் என்று பெயரெடுக்க போராடி வருகிறார். மேலும் இந்த குடும்பத்திற்கு பரம்பரை எதிரியாக இருக்கும் ”சகுந்தலா” வேதவல்லி குடும்பத்திற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். இதனால் சகுந்தலா செய்த குற்றத்திற்காக வேதவல்லி அவரை காவல் துறையில் ஒப்படைக்கிறார்.
பாக்கியலட்சுமியில் கோபி கதாபாத்திரத்திற்கு வந்த முடிவு?? இனி நடிக்கப்போறது கிடையாதா??
இப்படி இருக்கையில் இந்த சீரியல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சகுந்தலா கேரக்டரில் இதுவரை கரோலின் வில்லியாக நடித்து வந்த நிலையில் இவர் சீரியலை விட்டு அதிரடியாக விலகியுள்ளார். இதனால் இவருக்கு பதிலாக ஆக்ட்ரஸ் நிலானி நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் ஏற்கனவே பல சீரியலில் வில்லியாக நடித்த நிலையில் இதிலும் பட்டடையை கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.