நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது விஜய் செய்த காரியம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
வாரிசு திரைப்படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல இன்னல்களை கடந்து ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுபோக இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் பிரபு ஷாம் குஷ்பூ சங்கீதா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் படு பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதுமட்டுமன்றி டைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் நடிகர் விஜய்யை குறித்து நடிகை பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதாவது வாரிசு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீன் எடுக்கும்போது தளபதி விஜய்க்கு 103 டிகிரி ஃபீவர் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த கிளைமாக்ஸ் காட்சியில் எல்லா நடிகர்களும் இருப்பதால் நடிகர் விஜய் தனது உடலை பற்றி கவலை கொள்ளாமல் படத்தின் ஷூட்டிங்கை முடித்த பிறகு தான் ஹாஸ்பிட்டலுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதுதான் தளபதி என்றும் அவருடைய டெடிகேஷன் தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது என்று கூறியுள்ளார்.