நம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நம்முடைய முன்னோர்கள் நமக்கு பல இயற்கை மூலிகை மருத்துவத்தை நமக்கு கற்றுக் கொடுத்து சென்றுள்ளனர்.அந்த வகையில் மிகவும் பயனுள்ள பொருளை வைத்து மூலிகை ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
1. முதியார் கூந்தல் இலை – 100 கிராம்
2 கேசவர்த்தினி இலை – 100 கிராம்
3 . செக்கு தேங்காய் எண்ணெய் – 250 கிராம்
செய்முறை விளக்கம்:
இந்த மூலிகை ஹேர் ஆயில் தயாரிப்பதற்கு தேவையான அளவு முதியார் கூந்தல் இலைகளை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அதோடு நாம் எடுத்து வைத்துள்ள கேசவர்தினி இலைகளையும் கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 250 கிராம் செக்கு எண்ணெயை ஊற்றவும்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன் பிறகு எண்ணெய் மிதமான சூட்டிற்கு வரும் போது நாம் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்துள்ள மூலிகைகளை அதில் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நாம் தயாரித்துள்ள இந்த மூலிகை எண்ணெயை ஒரு சல்லடையில் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும். இந்த மூலிகை ஆயிலை நம் தலையில் தேய்த்து வருவதன் மூலம் நம் முடியின் வளர்ச்சி அதிகரிப்பதை நம்மால் உணர முடியும்.