ராஜா ராணி 2 சீரியலில் சிவகாமி வீட்டில் உள்ள அனைவரும் அர்ச்சனா குழந்தைக்கு பேர் வைக்கும் நிகழ்ச்சியை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அர்ச்சனாவின் அம்மா, அப்பா சந்தியா இந்த ஃபங்ஷனுக்கு கண்டிப்பா வரணும் என சொல்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அர்ச்சனா, வீட்டில் உள்ள அனைவரிடமும் சந்தியாவுக்கும் எனக்கும் ஏற்கனவே ஆகாது. இதை மனதில் வைத்து சந்தியா நிச்சயம் ஃபங்ஷனுக்கு வரமாட்டார் என்கிறார். உடனே சிவகாமி அப்படியெல்லாம் கிடையாது சந்தியா வருவார் என சொல்லி அர்ச்சனா வாயை அடைகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பிறகு சரவணன் வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் சந்தியாவிடம் கூறி ஃபங்ஷனுக்கு லீவு கேட்டு வரும்படி சொல்கிறார். இப்போ உள்ள சூழ்நிலைக்கு கண்டிப்பாக லீவு தர மாட்டாங்க என சந்தியா சொல்ல, சரவணன் முடிஞ்சு வர முயற்சி பண்ணி பாருங்க நமக்கு இத விட வேற ஆப்ஷன் கிடையாது என சொல்கிறார். உடனே ஐபிஎஸ் ஆபிஸரிடம் இரண்டு நாள் லீவு வேண்டும் என கேட்கிறார். அதற்கு அவர் கண்டிப்பாக லீவ் எல்லாம் கொடுக்க முடியாது என கரராக சொல்லிவிடுகிறார். இதனால் சந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்துடனே சரவணனிடம், லீவ் கிடைக்காத விஷயத்தைச் சொல்கிறார். ஆனா சரவணன் எப்படியாவது முயற்சி செஞ்சு பாருங்க என சொல்கிறார்.
பாரதி கண்ணம்மாவில் இத்தனை நாள் நாம நெனச்சது எல்லாமே தப்பு.., சீரியல் குழு பகீர் தகவல்!!
இதை சிவகாமி மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு ரவியிடம், சிவகாமி லீவு கிடைக்காத விஷயத்தால் அர்ச்சனா என்னென்ன பிரச்சனை செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. மேலும் சந்தியா வேற பயிற்சியில் சரியா மார்க் எடுக்க மாட்றா. இதுல அவளுக்கு தென்காசியில் போஸ்டிங் கிடைக்கலைன்னா சரவணன் ஓட வாழ்க்கை என்ன ஆகுறது என ரவியிடம் புலம்புகிறார். ரவியும் சிவகாமிக்கு ஆறுதல் சொல்லுகிறார். இத்துடன் இந்திய எபிசோட் முடிவடைகிறது.