பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை நாட்கள் ரசிகர்கள் காத்து கொண்டிருந்த அந்த காட்சி இப்பொழுது அரங்கேறி விட்டது. அதாவது பாரதிக்கு ஹேமாவும், லட்சுமியும் தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்ற உண்மை தெரிந்து விட்டது. ஒரு பக்கம் இது கனவாக இருக்குமோ என்ற பயம் அனைவருக்குமே இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் அதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பே கிடையாது. இப்படி இருக்க இப்பொழுது இன்றைய எபிசோடில் ஹேமா கஷ்டப்பட்டு முயற்சி செய்து பாரதியின் நம்பருக்கு கால் செய்கிறார். ஆனால் Switch Off என்று வருகிறது. மேலும் கண்ணம்மாவின் நம்பர் தெரியாமல் தவித்து கொண்டுள்ளார் ஹேமா. ஹேமாவை யார் காப்பாற்றப் போகிறார்கள், வெண்பாவின் இந்த வெறிச்செயல் அம்பலமாகுமா? என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.
இனிதே முடிந்த கெளதம் கார்த்திக்-மஞ்சிமா திருமணம்.., marriage கிளிக்ஸ் வைரல்!!
இப்படி இருக்க இப்பொழுது சீரியல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்டு கார்டு கிடையாதாம். அதாவது பாரதி கண்ணம்மா முதல் சீசன் தான் முடிவடைய போகிறதாம். அதன் இரண்டாவது சீசன் தொடங்கப்போகிறது என்று சீரியல் குழு அறிவித்துள்ளது.