சமீபத்தில் நடிகர் அர்னவ் என்பவரால் ஏமாற்றப்பட்ட நடிகை திவ்யா ஸ்ரீதர் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை திவ்யா ஸ்ரீதர்:
சின்னத்திரையில் தமிழில் கேளடி கண்மணி, மகராசி, கல்யாண பரிசு போன்ற தொடர்களில் நடித்து மக்களிடம் ரீச் ஆனவர் தான் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்த அர்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அர்னவ் என்னை ஏமாற்றியதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சமீபத்தில் திவ்யா கர்ப்பமாக இருப்பதாகவும், ஆனால் தற்போது அர்னவ் என்னுடன் இல்லை என்றும் கதறி அழுது ஒரு வீடியோவை வெளியிட்டார். இதை தொடர்ந்து அர்னவ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் கண்டிஷனல் பெயிலில் வந்த அர்னவ் மீண்டும் மனைவி திவ்யா ஸ்ரீதருடன் இணைந்து வாழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்காக இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கும் அஜித்.., வெளிவந்த உண்மை தகவல்!!
மேலும் அவர் மனம் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று திவ்யா கூறினார். இந்நிலையில் திவ்யாவுக்கு சீரியல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர். அந்த சந்தோஷமான நிகழ்வை திவ்யா ஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் திவ்யாவிற்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.