நடிகர் அஜித் நடிக்கும் துணிவு படத்தை பொங்கலுக்கு வெளியிட காரணம் குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்-அஜித்:
தற்போதைய சினிமா உலகில் மாஸ் காட்டி வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர்கள் தான் நடிகர் அஜித் – விஜய். இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது. தற்போது விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு போன்ற படங்கள் உருவாகியுள்ளது. இதில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த வாரம் இவங்களுக்கு ஹெவி டோஸ் இருக்கு! ஆத்திரத்தில் கமல்! வெளியான ப்ரோமோ!!
ஆனால் அஜித் நடித்த துணிவு படத்தில் இருந்து எந்த சாங்கும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இப்படி பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதனால் படத்தை முடிக்க மிக தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் பணிகள் இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில், பொங்கலன்று தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்தால் மாஸ் ஓப்பனிங் ஆக இருக்கும் என்று அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது . அதுமட்டுமின்றி சினிமாவில் அவருக்கு இருக்கும் மவுசை மனதில் வைத்து பிடிவாதமாக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய்க்கு போட்டியாக துணிவு படத்தை இறக்க வேண்டும் என்றும் அஜித் கூறியதாக சொல்லப்படுகிறது. கடந்த 2014 க்கு பிறகு விஜய், அஜித் படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.