பாக்கியலட்சுமி சீரியலில் சாப்பாடு விஷயத்திற்காக இனியா, ராதிகாவிடம் சண்டை போடும் நிலையில் இன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்கியா வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது அக்கம் பக்கத்தினர் கோபி, இனியா வீட்டை விட்டு வெளியே போன விஷயத்தை கேட்டு காயப்படுத்துகின்றன. பிறகு செல்வி அங்கு வர இருவரும் பேசிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கின்றன. அந்த நேரத்தில் ஏரியாவின் தலைவர் பாக்யாவிடம் கோபி பற்றி பேச அவருக்கும் தக்க பதிலடி கொடுக்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இறுதியில் கோபி அங்கு வர உடனே அந்த தலைவர் இந்த மாத மெயின்டனன்ஸ் அம்மவுண்டை யார்கிட்ட வாங்குறதுனு கேட்கிறார். பாக்கியா நானே கொடுப்பேன், ரோட்ல போற யாரும் கொடுக்க வேண்டாம் என கோபியின் மூக்கை உடைக்கிறார். பிறகு வீட்டிற்கு வரும் பாக்கியா எழில் வருத்தமாக இருப்பதை பார்த்து என்ன விஷயம் என்று கேட்க, அமிர்தா வீட்டில் நடந்ததை சொல்கிறார். பிறகு எழிலுக்கு பாக்கியா ஆறுதல் கூறுகிறார். மறுபக்கம் இனியா, மயூவிடம் என்ன சமைக்க என்று ராதிகா கேட்க, இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர்.
35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் கூட்டணி வைக்கும் பிரபல இயக்குனர்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
இதனால் ராதிகா ஹெல்த் மிக்ஸ் செய்து கொடுக்கிறார். ஆனால் இனியா எனக்கு வேண்டாம் என்று சொல்ல, கோபி உடம்புக்கு நல்லது சாப்பிடு என சொல்கிறார். உடனே இனியா எனக்கு பிடிக்கலைனா விடுங்க என்னை கட்டயபடுத்தாதீங்க என கோபத்துடன் கத்துகிறார். மேலும் ராதிகாவிடம் உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல, நீங்க யாரு? நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்? என சண்டை போடுகிறார். உடனே ராதிகா உனக்கு இந்த வயசுலயே இவ்வளவு ஆட்டிடியூட் ரொம்ப தப்பு என சொல்கிறார். இதனால் இனியா ஆத்திரமடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.