தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ரசிகர்களின் செயலால் காண்டாகி உள்ளார். இனிமேல் இந்த மாதிரி செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிம்பு வேண்டுகோள்:
தமிழ் சினிமாவில், லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அடைமொழியுடன் அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த, வெந்து தணிந்தது காடு திரைப்படம் பெரிய அளவில் ரீச் ஆகியது. படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால், சிம்பு உட்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை அடுத்து, நடிகர் சிம்பு தற்போது கொரோனா குமார் மற்றும் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் செயலால் நடிகர் சிம்பு காண்டாகி, முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போது, எல்லோரும் அப்டேட் கேட்கிறார்கள். இது தகுந்த செயல் அல்ல.
ஜனனி செயலால் கதறி அழுத ADK., ஆதங்கத்தில் வெளிவந்த உண்மைகள் – பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ!!
எனது சமீபத்திய படத்தில் முத்துவாக நான் வாழ்ந்தேன். ஆனால், அதை முன்னரே தெரிவித்துவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. நான் என் படத்தை மட்டும் சொல்லவில்லை. எல்லாருடைய படத்திற்கும் சேர்த்து தான் பேசுகிறேன். படம் போய்க்கொண்டிருக்கும் போதே இனி யாரும் அப்டேட் கேட்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சிம்புவின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.