ஊரடங்கு காரணமாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம், வெள்ளியின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து உள்ளதால் நகை வாங்குபவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை நிலவரம்:
இந்தியாவில் மார்ச் 23ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் ஏசி இல்லாத நகைகடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் வியாபாரம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து உள்ளது.
- ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) – ரூ. 4,476
- ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) – ரூ. 35,808
- ஒரு கிராம் வெள்ளியின் விலை – ரூ. 52.10
- ஒரு கிலோ வெள்ளியின் விலை – ரூ. 52,100
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |