‘தெலுங்கானாவில் ஒரு சுஜித்’ – ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு..!

0

தெலுங்கானா மாநிலத்தில் சங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவன் உயிர் இழந்தான்.

சாய் வர்தன்

தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் பாதான்சேருவை சேர்ந்தவர் மங்கலி கோவர்தன். இவரது மனைவி நவீனா. இவர்களது 3வது மகன் சாய் வர்தன். கோவர்தன் குடும்பத்தினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மேதக் மாவட்டம், போட்சனாபல்லி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில், கோவர்தனின் மாமா பிட்சாதிபதிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலங்களை பார்ப்பதற்காக நேற்று கோவர்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றனர்.

ஏற்கனவே அங்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்ட நிலையில் தண்ணீர் வராததால் வேறு இடத்தில் தோண்டிக்கொண்டிருந்தன. மேலும் 120 ஆதி தோண்டியும் தண்ணீர் வராததால் அப்பணியை அப்படியே விட்டுவிட்டு வேறு பணியில் ஈடுபட்டுள்ளன.

மீட்பு பணி

அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தன பெற்றோர் கண்முன்னே புதிதாக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளார். சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது.

இருப்பினும், 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டனர். சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கவலையடைந்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here