தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் வினாத்தாளில் இருந்த பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதற்கு முன்னதாகவே பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. இறுதியாக தேர்வு நடைபெற்ற பாடத்திற்கு மட்டும் கொரோனா பரவல் காரணமாக பல மாணவர்களால் எழுத இயலவில்லை. எனவே அந்த தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்வுகளுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று முதல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தொடங்கி உள்ளது.
இதில் தமிழ் வழி மாணவர்களுக்கு வேதியியல் (Chemistry) தேர்வு வினாத்தாளில் கேள்வி ஒன்றில் இருந்த பிழை காரணமாக அனைத்து தமிழ்வழி மாணவர்களுக்கும் 3 போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கப்பட்டு உள்ளது. புரதம் என்ற சொல்லிற்கு பதிலாக புரோட்டின் என வழங்கப்பட்டு இருந்ததால் இந்த கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |