காதல் தோல்வி அடைந்ததால் நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்பொது உன்னுடைய முறை என காதலி ஒருவர் தனது காதலனுக்கு ஒரு டன் வெங்காயத்தை பரிசாக அனுப்பிய சம்பவம் நடைபெற்று உள்ளது.
சீனாவில் காதலர் தினம்:
சீனாவில் ஆண்டுதோறும் மே 20ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அங்குள்ள ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ என்பவர் நீண்ட நாட்களாக ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். இதனால் காதலர் தினத்தை மாஸாக கொண்டாட திட்டமிட்டு இருந்தார். ஆனால் காதலனோ அந்தப் பெண்ணை ஏமாற்றி பிரிந்து சென்று விட்டார். பிரேக் அப் ஆன சோகத்தில் 3 நாட்கள் அழுது கொண்டே இருந்திருக்கிறார் அந்த இளம்பெண்.
ஆனால் காதலரோ இதற்கு கவலை அடைந்த மாதிரி தெரியவில்லை. இதனால் செம்ம கோபத்தில் இருந்துள்ளார் ஜிபோ. அவரை பழிவாங்க எண்ணி 1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து காதலன் வீட்டுக்கு ஒரு கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளார். அதில் நான் 3 நாட்கள் அழுதேன், இது உன்னுடைய முறை என எழுதப்பட்டு இருந்தது.
1000 கிலோ வெங்காயத்தைப் பார்த்து திகைத்துப் போன அந்த நபர், அழாமல் இருந்ததால் நான் என்ன மோசமான மனிதனா? என கேட்டு உள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |