6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவார்கள் – உலக வங்கி எச்சரிக்கை..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சியால், உலகமெங்கும் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என உலக வங்கி தெரிவித்து உள்ளது.

உலக வங்கி:

100 நாடுகளில் தற்போது உலக வங்கி உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அதன் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்து உள்ளார். இந்த காரணத்தால் பட்டினிச் சாவுகள் தவிர்க்கப்படுவதாகவும், பல கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 3 வருடங்களாக வறுமை ஒழிப்பில் கிடைத்த அனைத்து நன்மைகளையும் நாம் இழந்து விட்டோம்.

உலகளவில் பொருளாதார நெருக்கடியால், 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த காரணத்தால் வறுமைக்கு செல்லும் நாடுகளில், அடுத்து வரும் 15 மாதங்களுக்கு 16,000 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட உள்ளதாகவும், அரசுகளும் பிற அமைப்புகளும் பகைமையை மறந்து வறுமையை ஒழிக்க போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here