ஆகஸ்ட் 3 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு..!

0

ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 23ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் தொழில் துறைகள் இயங்க தொடங்கி உள்ளன. மறுபுறம் 50 நாட்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளை ஆகஸ்ட் 3ம் தேதி முதல் திறக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் இதுவரை 2,474 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here