கொரோனா தாக்கத்தால் தொழில் துறைகள் முடங்கி உள்ள நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 1,069 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
பங்குச்சந்தை வீழ்ச்சி:
இந்தியாவில் நான்காம் கட்டமாக ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் 1 லட்சத்தை தாண்டி விட்டது. இதன் தாக்கம் பங்குச்சந்தையில் மிக அதிகமாக எதிரொலிக்கிறது. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்களும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாக அமையவில்லை. பங்குச்சந்தையில் பார்மா, ஐடி பங்குகளைத் தவிர மற்ற துறை பங்குகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
இதனால் தேசிய பங்குச்சந்தையில் 1,326 பங்குகள் சரிவில் சென்றன. 273 பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் பங்குகள் விற்பனை விலை அதிகரித்த காரணத்தால் 1,068 புள்ளிகள் சரிந்து 30,028ல் நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 313 புள்ளிகள் சரிந்து 8,823 புள்ளிகளில் நிலைபெற்று உள்ளது. இதனால் பல லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |