தற்போதெல்லாம் ஜீவா கொஞ்சம் கொஞ்சமாக மீனாவின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டார். தற்போது கூட முல்லைக்காக வீடு கட்டும் பிளானை நிறுத்தியதால் மூர்த்தியிடம் ஜீவா சண்டையிடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காத விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
முல்லையால் இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள போகிறார்கள். செயற்கை முறையில் சிகிச்சை எடுக்க நிறைய செலவாகும் என்பதால் வீடு கட்டும் பிளானை நிறுத்திவைக்கலாம் என மூர்த்தி கூறிவிடுகிறார்.
ஆனால் மீனாவிற்கு இந்த விஷயம் பிடிக்கவே இல்லை. வீட்டில் உள்ள ஒருவருக்காக வீடு கட்டுவதை நிறுத்த வேண்டுமா என நினைக்கிறார். இதை ஜீவாவிடமும் சொல்லி சண்டை போடுகிறார். ஜீவாவிற்கும் இது சரி என தோன்றியதால் மூர்த்தியிடம் சென்று சண்டை போடுகிறார்.
ஜீவா தற்போதெல்லாம் மீனா பேச்சை கேட்டு குடும்பத்தில் உள்ள அனைவரையும் எதிர்த்து கொண்டிருக்கிறார். மீனாவின் அப்பாவும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது மீனாவையும் ஜீவாவையும் தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். குடும்பத்தை விட்டு ஜீவா பிரிய போகும்படியாக தான் தற்போதெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்