ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் தடையின்றி கிடைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து ரேசன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை தொகுப்பினை அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
19 வகையான மளிகை தொகுப்புகள்..!
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் வெளி மார்க்கெட்டுகளில் விலையேற்றத்தை தடுக்கவும் நியாய விலைக் கடைகள் மூலம் 500 ரூபாய் விலையில் 19 வகையான மளிகை தொகுப்புகள் விற்பனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களுக்கு ‘ஆரத்தி எடுக்கும் போலீஸ்’ – மஹா.,வில் புது யுக்தி..!
இதையடுத்து, இன்று மதுரை பொன்மேனியில் உள்ள மதுரா கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மலிவு விலை மளிகை தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இது குறித்து செல்லூர் ராஜு கூறியதாவது.,
ஆண்களை கொடுமைப்படுத்தும் மனைவிகளிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் – முதல்வருக்கு கோரிக்கை
- தமிழகத்திலுள்ள 23 ஆயிரத்து 486 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகள், சிறு பல்பொருள் அங்காடிகள், நகரும் பண்ணை பசுமை கடைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு 19 வகையான மளிகை தொகுப்புகள் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
- இந்த மளிகை தொகுப்பு வெளிமார்க்கெட்டில் 600 ரூபாய் மதிப்புடையது. எனவே குறைந்த விலையில் நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எத்தனை தொகுப்பு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
- இந்த 19 வகை மளிகைப் பொருன் பின்னர் அவர் கூறியதாவது,ட்களையும் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. தேவைப்படும் பொருட்களை மட்டும் கூட வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமே வெளிமார்க்கெட்டில் மளிகை விலையை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான்.
- எனவே ரேசன் கார்டுதாரர்கள் மட்டுமல்லாது அனைவரும் இந்த மளிகை தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் தமிழகம் முழுவதும் 10 லட்சம் மளிகை தொகுப்புகள் இன்று விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |