கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பூரண நலம் பெற்றுள்ளார். தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து கீர்த்தி சுரேஷ் தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார்.
ஆஸ்காரில் இடம் பிடித்த ஜெய்பீம் திரைப்படம் – தமிழ் சினிமா படைத்த வரலாற்று சாதனை!!
கீர்த்தி சுரேஷ்:
தற்போது கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் தலைவிரித்தாடி கொண்டிருக்கிறது. மறுபடியும் அரசு கடுமையான கட்டுபாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பல நடிகை நடிகர்களுமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இதனால் கீர்த்தி சுரேஷ் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது கீர்த்தி சுரேஷ் பூரண நலம் பெற்றுள்ளதாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் தன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றையும் டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
'Negative' can mean a positive thing these days. Grateful for all your love and prayers, hope you had a lovely Pongal and Sankaranthi! ?❤️ pic.twitter.com/Sop5wPfBA1
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 18, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்