மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டும் என்பது நம்மில் பலருக்கு விருப்பம். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான ஸ்னாக்ஸ் தான் நாம் தற்போது இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது டீ கடை ஸ்டைல் ஆட்டுக்கால் போண்டா செய்வது எப்படி என்பதை காண்போம்.
தேவையான பொருட்கள்
மைதா – 1 கப்
ரவை – 2 தேக்கரண்டி
சோடா மாவு – 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
பால் / தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சினி – 1/2 கப்
ஏலக்காய் – 3
முட்டை -1
செய்முறை
முதலில் சினி மற்றும் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு முட்டை ஊற்றி நன்றாக அடித்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை,சோடா மாவு, உப்பு, நெய் மற்றும் அரைத்து வைத்து உள்ள சினி முட்டை கலவையை சேர்த்து பால் அல்லது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இந்த மாவை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தேவையான அளவில் உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். தற்போது சுவையான ஆட்டுக்கால் போண்டா தயார்.
குறிப்பு: இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு வைத்தும் செய்யலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்