வித்தியாசமான முறையில் இறால் நெய் மிளகு மசாலா… இந்த சண்டே இத செஞ்சு பாருங்க!!!

0

அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலும் பிடித்த உணவு கடல் உணவுகளான மீன், இறால் மற்றும் நண்டு உள்ளிட்ட உணவுகள் தான். மேலும் இந்த கடல் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்று. அதிலும் இறால் மிகவும் சுவையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு. இந்நிலையில் இந்த பதிவில் இறால் நெய் மிளகு மசாலா எப்படி செய்வது என்பதை காண்போம்.

தேவையான பொருட்கள்

இறால் – 300 கிராம்

நெய் – 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

வெங்காயம் – 1

நறுக்கிய பூண்டு – 1 தேக்கரண்டி

மிளகு – 2 தேக்கரண்டி

கெட்டியான புளி தண்ணீர் – 2 தேக்கரண்டி

சர்க்கரை – 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 2

சீரகம் – 1 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

அண்ணாச்சி பூ – 1

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை வைத்து அதில் மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம்,அண்ணாச்சி பூ மற்றும் கருவேப்பிலை சேர்த்து கொண்டு 1 முதல் 2 நிமிடங்கள் வதங்கி வேண்டும். ஆறிய பிறகு அதை நன்கு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து சுடு தண்ணீரில் புளி விழுது மற்றும் சர்க்கரையை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். மேலும் அதில் நறுக்கிய வெங்காயம் சிவக்க வறுத்து கொள்ளவும். அதன் பின்னர் அரைத்த மசாலா மற்றும் புளி,சர்க்கரை தண்ணீரை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். அது ஒன்றோடு ஒன்று கலந்த பிறகு , சுத்தம் செய்து வைத்து உள்ள இறாலை சேர்த்து கொள்ள வேண்டும். அது ஒரு மசாலா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடவும். தற்போது சுவையான இறால் நெய் மிளகு மசாலா ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here