பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மா வீட்டில் ஹேமாவை விடுவது தான் சரி என்று முடிவெடுக்கிறார். இதனால் குடும்பம் மொத்தமும் சந்தோஷமடைகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பரபரப்பான பல காட்சிகள் நடந்து கொண்டுள்ளது. தூக்கத்தில் கூட ஹேமா சமையல் அம்மா என்று புலம்ப வேறு வழியில்லாமல் கண்ணம்மா வீட்டிற்கு சென்று விடலாம் என்று முடிவெடுக்கிறார். வெண்பா வேறு இதனால் சரியான கோவத்தில் இருக்கிறார்.
எப்படி பாரதி போய் கண்ணம்மாவை அழைத்து வரலாம் என்றும் கோவமடைகிறார். இதெல்லாம் ஹேமாவால் நடந்தது தான் என்றும் சொல்கிறார். மேலும் வேலைக்கார பெண் சாந்தி வேறு வெண்பாவை ஏற்றி விடுகிறார்.
அடுத்ததாக சௌந்தர்யாவும் வேணுவும் ஹேமாவை நினைத்து கவலையடைகின்றனர். அப்பொழுது ஹேமாவை மாடியில் இருந்து தூக்கி கொண்டு வருகிறார். மேலும் ஹேமாவின் ட்ரஸ்களையும் எடுத்து வருகிறார்.
இத்தனை நாட்கள் ஹேமாவை தான் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டதாகவும் அவள் சந்தோசம் மிகவும் முக்கியம் என்று கூறி கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இதனால் வீடே சந்தோஷமடைகிறது. ஹேமா தூங்கி கொண்டிருக்க எப்படி கண்ணம்மா இவள் மனதில் இந்த அளவிற்கு பதிந்து போனாள் என்று கண்கலங்குகிறார்.
கண்ணம்மாவின் வீட்டிற்கு வர ஹேமாவை எழுப்பிகிறார். ஹேமா கண்ணம்மாவின் வீட்டை பார்த்ததும் சந்தோஷமடைகிறார். ஹேமா கண்ணம்மாவை பார்த்ததும் மிகவும் சந்தோஷமடைகிறார். ஹேமா கண்ணம்மாவின் கையை பிடித்து பேசுவதையும் சந்தோஷமடைவதையும் பாரதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதனை பார்த்து கண்கலங்குகிறார். மேலும் பாரதி கண்ணம்மாவிற்கு காசு கொடுக்க கோவமடையும் கண்ணம்மா அன்பை நான் விலைக்கு வாங்குவது கிடையாது என்று சொல்கிறார். மேலும் பாரதி ஹேமாவை பிரிய மனமில்லாமல் செல்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்