இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 546 பேர் இத்தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.
அதிகரித்த தொற்று எண்ணிக்கையால் இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த ஆண்டின் மார்ச், ஏப்ரல் மாதம் முதல் கடுமையான ஊரடங்கு போடப்பட்டது. அதனோடு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. கூடவே மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விட்டது.
இவ்வாறான தீவிர முயற்சிகளால் தொற்றின் பரவல் வேகம் எதிர்பார்த்ததை விட இந்தியாவில் வேகமாகவே கட்டுக்குள் வந்தது. ஆனாலும் சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக குறைந்த தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் டெல்டா பிளஸ் வைரஸ் வேறு மக்களிடம் மூன்றாம் அலை பயத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் குணமடைந்தேவர்களின் எண்ணிக்கை 35,087 ஆக உள்ளது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக உள்ளது
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்