விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜய் குமார் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில்’ இருந்து விலகியதை அடுத்து அது பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
பிபி ஜோடிகள்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நிலைத்த வனிதா அதன் பிறகு பல பிரச்சனைகளில் சிக்கி தவித்தார். ஏனெனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டிலை கைப்பற்றிய பின்பு தனியாக யூடுப் சேனல் உருவாக்கினார். அதற்கு துணையாக இருந்த பீட்டர் பால் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். இதனால் சோசியல் மீடியா முழுக்க பல பிரச்சனை ஏற்பட்டது.
தான் செய்தது எந்த தவறும் கிடையாது என்று கூறி பலரையும் கேவலமாக பேசினார். அவரை விட்டு பிரியவும் செய்தார். 6 மாதங்கள் கூட இந்த உறவு நிலைக்க வில்லை என்று பலரும் கேலி, கிண்டல் செய்து தான் வருகின்றனர். ஆனாலும் மக்களுக்கு இவர் மீது ஒரு இரக்கம் இருக்க தான் இருக்கிறது. ஏன்னெனில் இவரது அடுத்தடுத்த வெற்றிக்கு இவரது ரசிகர்கள் இவரை ஊக்குவித்து தான் வருகின்றனர்.
தற்போது பிபி ஜோடிகளின் இவர் கலந்துகொண்டதை அடுத்து அதிரடியாக இதில் இருந்து விலகினார். அதற்கு காரணத்தையும் தெரிவித்தார். தன்னை விட முத்த நடிகை தன்னை பார்த்து பொறாமை படுவதாகவும், இதனால் பல அவமானங்களை சந்தித்தாகவும் கூறியிருந்தார். இதனை பற்றி ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டதற்கு அதை பற்றி வணிதாவிடம் தான் கேட்க வேண்டும். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. இதனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நோ கமண்ட்ஸ் என்று கூறி சென்றுள்ளாராம்.